தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
காஷ்மீரில் ஊடுருவ முயன்றவர்கள் தீவிரவாதிகள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்: 8 பேர் சாவு

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் இந்திய எல்லைக்குள் பெருமளவில் ஊடுறுவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முயற்சியை இந்தியராணுவம் மற்றும் விமானப் படையினர் பெரும் தாக்குதல் நடத்தி முறியடித்தனர்.

இந்த மோதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் நடந்தது.

எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஊடுறுவி விடலாம் என்ற தீவிரவாதிகளின் எண்ணத்திற்கு மாறாக, ராணுவத்தினர் மற்றும் விமானப் படையினர்அதிரடியாக புகுந்து தாக்குதல் தொடுத்தனர். முழுமையான அளவில் தீவிரவாதிகளின் முயற்சியை அவர்கள் முறியடித்தனர். தாக்குதலில் விமானப் படைஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ராணுவத்தினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரை பலமுறை விமானப்படை ஹெலிகாப்டர்கள் சம்பவஇடத்திற்கு அழைத்துச் சென்றன.

ஊடுறுவல் நடந்த பகுதியில் படையினர் தரை மார்க்கமாக செல்ல வழியில்லாததால், விமானப் படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. வனப்பகுதியில் ராணுவத்தினர் சென்றபோது, அவர்கள் மீது தீவிரவாதிகள் தானியங்கித் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். கிரனெட் குண்டுகளையும்வீசினர். படையினர் திருப்பித் தாக்கியதில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பத்கம் மாவட்டம், யூஸ்மார்க் என்ற வனங்கள் சூழ்ந்த பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்தீவிரவாதிகளின் இரண்டு மறைவிடங்கள் அழிக்கப்பட்டன. தீவிரவாதிகளிடமிருந்து நிறைய ஆயுதங்களும், தகவல் தொடர்பு சாதனங்களும் பறிமுதல்செய்யப்பட்டன.

கார்கில் போருக்குப் பிறகு பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக விமானப் படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

தீவிரவாதிகள் பெரும் திட்டத்துடன், பெருமளவிலான ஆயுத பலத்துடன் ஊடுறுவல் முயற்சியில் ஈடுபட்டனர். ராணுவத்தின் தாக்குதலைச் சமாளிக்கமுடியாமல் தீவிரவாதிகள் தப்பியோடினர். தீவிரவாதிகள் ஊடுறுவல் குறித்து சனிக்கிழமையே ராணுவத்திற்குத் தகவல் கிடைத்து விட்டது. இதனால்தீவிரவாதிகளின் முயற்சி வெற்றி பெறவில்லை.

துக்ளிக்சக்யார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த மோதலில், நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். மோதலின்முடிவில் நான்கு ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 18 துப்பாக்கித் தோட்டாக்கள், 400 வெடி பொருட்கள், 36 கையெறி குண்டுகள், 2 வயர்லஸ் செட்டுகள்,இந்திய, பாகிஸ்தானிய ரூபாய் நோட்டுக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு சம்பவத்தில், அனந்த்நாக் மாவட்டம், அரூ என்ற பகுதியில் முகம்மது இஸ்ாமாயில் பட் என்பவரது வீட்டில் தீவிரவாதிகள் கையெறிகுண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

நெஷீரா என்ற இடத்தில் பாகிஸ்தானிய தீவிரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதேபோல, சூரன்கோட், பத்கம், பாரமுல்லாஆகிய பகுதிகளில தலா ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் முழுவதிலும் நடந்த தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+