For Daily Alerts
Just In
செயலை விட அதன் பயனை நேசித்தால்!
நாகர்கோவில் அருகே பயணிகள் ரயில் மோதல்: 3 பேர் காயம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே இரு பயணிகள் ரயில் மோதிக் கொண்டதில் 3 ரயில்வே ஊழியர்கள் காயமடைந்தனர். இதுதொடர்பாக 3 ரயில்வே ஊழியர்கள்சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மும்பை-நாகர்கோவிலுக்கிடையிலான சிறப்பு பயணிகள் ரயிலும், கன்னியாகுமரி சிறப்பு பயணிகள் ரயிலும் திங்கள்கிழமை நாகர்கோவில் அருகே மோதிக்கொண்டன.
தவறான சிக்னல் காரணமாக இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் 3 ரயில்வே ஊழியர்கள் காயமடைந்தனர். ஒரு ரயில் பெட்டிகவிழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்பாக பணியின்போது அலட்சியமாக இருந்ததாக 3 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கொல்லத்திலிருந்து ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த பெட்டி அகற்றப்பட்டது. விபத்து காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments
Story first published: Monday, May 15, 2000, 5:30 [IST]