செயலை விட அதன் பயனை நேசித்தால்!
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் தாக்குதலைச் சமாளிக்கும் வகையில் இலங்கை ராணுவத்திற்கு நவீன ஆயுதங்கள் வாங்க ரூ. 3400 கோடி வரை செலவழிக்கத்திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறியுள்ளார்.
கொழும்பில் திங்கள்கிழமை இத்தகவலை அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தைப் பிடிக்கும் முயற்சியில் விடுதலைப் புலிகள் தொய்வுற்ற நிலையில் கதிர்காமர்இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கிடையே, யாழ்ப்பாணத்தில் நடந்து வரும் சண்டையால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவரும் குழுவினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள நவீன ரக போர் விமானங்களைக் கொண்டு இலங்கை விமானப் படை விடுதலைப் புலிகள் இலக்குகள் மீதுதாக்குதல் நடத்தி வருகிறது. இந்த விமானங்கள் மிகவும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்ததால் அப்பாவிப் பொதுமக்களும் பலியாவார்கள்என்று அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஹாலந்து நாட்டிலிருந்து வந்து யாழ்ப்பாணம் பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் அமைப்பைச் சேர்ந்த இசபெல்லே சிம்சன்கொழும்பிலிருந்து தொலைபேசி மூலம் தெரிவிக்கையில், இஸ்ரேலிடமிருந்து இன்னும் அதிக விமானங்களை இலங்கை அரசு பெற்றால் போர்உக்கிரமடையும். இதனால் அப்பாவி மக்கள் அதிக அளவில் பலியாவது தவிர்க்க முடியாது என்றார்.
வெள்ளிக்கிழமை நடந்த விமானத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உள்பட 5 பொதுமக்கள் இறந்தனர். பல்லிக்குடா பகுதியில் இந்த தாக்குதல்நடந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.