செயலை விட அதன் பயனை நேசித்தால்!
சென்னை:
திருமணமாகி 12 நாட்களில் 3 மாத கர்ப்பம் தரித்த புதுப் பெண், கருக்கலைப்பின் போது மரணமடைந்தார்.
அப் பெண்ணுக்கு கருக்கலைப்பு சிகிச்சை அளித்த டாக்டரும், கணவரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரில் வசிக்கும் சுகுமாரன்- சாரதா தம்பதிகளுக்கு மே மாதம் 1-ம் தேதிதிருமணம் நடைபெற்றது. திருமணமாகி 12 வது நாளில் அதாவது மே 12ம் தேதி சாரதா கருக்கலைப்புக்காகஅப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனனயில் சேர்க்கப்பட்டார்.
தனது மனைவி மூன்று மாத கர்ப்பம், அவருக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சாரதாவை அவரதுகணவன் சுகுமாரன் தான் மருத்துவ மனையில் சேர்த்தார்.
கணவர் சுகுமாரன் சம்மதத்தோடு சாரதாவுக்கு கருக்கலைப்பு சிகிச்சை அளித்தார் டாக்டர் நம்பிராஜன் .
ஆனால், கருக்கலைப்பின் போது சாரதா எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார்.
திருமணமான 12 நாளில் மகள் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிரச்சி அடைந்த சாரதாவி ன் தந்தைடில்லி நாதன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து முதலில் கணவர் சுகுமாரனை விசாரித்தனர்.
திருமணம் முடிந்து 12 நாட்களில் எப்படி 3 மாத கர்ப்பம் தரிக்க முடிந்த்து என்ற கேள்விக்கு அப்போது தான் விடைகிடைத்த்து.
சுகுமாரன்- சாரதா திருமண நிச்சயதார்த்தம் மூன்று மாதங்களுக்கு முன்பே நடைபெற்றுள்ளது.
அதன் பின்னர் இருவரும் அடிக்கடி சந்திக்கத் துவங்கினர்.
மணம் செய்துக் கொள்ளப் போகிறவர்கள் என்ற உரிமையோடு இருவரும் எல்லை தாண்டி உறவாடியதாகவும்,அதன் விளைவுதான் சாரதாவின் கர்ப்பம் என்றும் சுகுமாரன் போலீசாரிடம் தெரிவித்தார்.
கருக்கலைப்பு செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றிருக்க வேண்டியது தானே என்று போலீசார் மேலும் விசாரித்தபோது, திருமணம் முடிந்து 12 நாளில் மூன்று மாத கர்ப்பம் என்று சொன்னால் , மனைவியை சந்தேகிப்பார்கள்;உண்மையை ச்ொன்னால் குடும்பத்தினர் அசிங்கமாக பேசுவார்கள் என்ற பயத்தின் காரணமாக தான் கருக்கலைப்புமுடிவை எடுத்தோம் என்றார்.
ஆனால், இந்த விளக்கத்தை விசாரணையின் மூலம் தெரிந்து கொண்ட போலீசார், சட்டப்படி சாரதாவின் மரணம்தொடர்பாக கணவர் சுகுமாரன், டாக்டர் நம்பு ராஜந் ஆகிய இருவரையும் கைது ச்ெய்தனர்.












Click it and Unblock the Notifications