For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
விலைவாசி உயர்வைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் பேரணி - கவர்னரிடம் மனு

சென்னை:

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் சென்னையில் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர். பேரணி முடிவில்தமிழக ஆளுநர் பாத்திமா பீவியிடம் மனு கொடுத்தனர்.

ரேஷன் அரசி, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தமிழக அரசும் இந்த விலை உயர்வைநடைமுறைப்படுத்தியுள்ளது. விலை உயர்வால் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இந்த விலைவாசி உயர்வை மத்திய, மாநிலஅரசுகள் கைவிடவேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.

சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ் காந்தி சிலையிலிருந்து கவர்னர் மாளிகை வரை பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக, ராஜீவ் காந்தி சிலைக்கு தமிழககாங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மாலை அணிவித்தார். பேரணிக்கு அவர் தலைமை தாங்கினார். பேரணியில் தமிழக காங்கிரஸ் முன்னாள்தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணி முடிவில் கவர்னர் பாத்திமா பீவியை திண்டிவனம் ராமமூர்த்தி, குமரி அனந்தன், தங்கபாலு ஆகியோர் சந்தித்து மனு கொடுத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X