தமிழகத்தில் இன்று
கோயம்பத்தூர்:
ஊட்டியில் ஆண்டுதோறும் அரசின் சார்பில் நடத்தப்படும் மலர்க் கண்காட்சி, தேயிலை விவசாயிகள் போராட்டத்தையடுத்து இந்த ஆண்டு ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் போராட்டத்தில் வன்முறை மூண்டது. இதில் 20 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு ஆதார விலையை அதிகரிக்கக் கோரி தேயிலை விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.திங்கள்கிழமை மாலை சுமார் 10,000-க்கும் அதிகமான விவாசியகள் அரை நிர்வாண கோலத்தில் ஊர்வலம் நடத்தினர்.
பின்னர் இவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸார் பலமுறை கேட்டுக் கொண்டனர். அப்போதுவிவசாயிகள் போலீஸார் மீது கற்களை வீசித் தாக்கத் தொடங்கினர். இதில் சுற்றுலா பயணிகளின் 20 வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பலகடைகளுக்குச் சேதம் ஏற்பட்டது. 7 போலீஸாரும் காயமடைந்தனர்.
விவசாயிகள் வன்முறையில் இறங்கியதையடுத்து போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனர்.
மலர்க் கண்காட்சி ரத்து:
விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்திருப்பதையடுத்து இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்படுவதாக மாவட்டஆட்சியர் சிவசங்கரன்அறிவித்துள்ளார். மலர்க் கண்காட்சி நடைபெறும் தாவரவியல் பூங்காவின் நுழைவாயில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டம் காரணமாக மேட்டுப்பாளையம்-கோவை இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊட்டியிலும், தாவரவியல்பூங்காவிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications