தமிழகத்தில் இன்று
சென்னை:
மூலிகை செடிகள் உற்பத்தி மூலம் சீனாவில் 20 ஆயிரம் கோடிக்கு வருமானம் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் 450 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.எனவே மூலிகை உற்பத்தியை பெருக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கூறுகையில், தமிழகத்தில் மூலிகை வைத்தியம் என்பது புராதனமானது. இப்போதும் வயதானவர்கள்மூலிகை மருத்துவத்தை தான் நாடுகின்றனர். அந்தளவுக்கு பாரம்பரியமிக்க தமிழக மூலிகை மருத்துவத்தை உலக அமைப்புகள் கூட பாராட்டியுள்ளன.
சீனாவில் மூலிகை செடிகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்நாட்டிற்கு மூலிகை செடிகள் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்கிடைக்கிறது. தமிழ்நாட்டில் 450 கோடிக்கு வருவாய் கிடைக்கிறது.
அதை மேலும் ஊக்கப்படுத்தி மூலிகை செடிகள் உற்பத்தியை பெருக்கினால், வருவாயை உயர்த்த முடியும் என்று அரசு கருதுகிறது. தமிழகத்தில் அதிகமாகமூலிகை செடிகள் உற்பத்தியாகும் கொல்லிமலை, குற்றாலம் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், "மருத்துவ மூலிகை செடிகள் பேணிகாக்கும் பகுதி என அறிவிக்கப்படும்.
சிறந்த வனப்பகுதிகளை கண்டுபிடித்து தீவிர மூலிகை சாகுபடி செய்யப்படும். இதன் செயல்பாடுகளை எனது செயலாளரே கவனிப்பார் என்றார் கருணாநிதி.