தமிழகத்தில் இன்று
சென்னை:
கோயில் திருப்பணிக்கு அஸ்திவாரம் தோண்டிய போது 17 ஐம் பொன் சிலைகள்கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புராதன சிலைகளின் மதிப்பு 4 கோடி ரூபாய் என்றுகணக்கிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனைக்கு அருகில் அனந்தூர் திருமேனிநாதர்திருக்கோயில் உள்ளது. இக் கோயிலில் திருப்பணி நடைபெற்றுவருகிறது.
கோவில் வடக்குப் பகுதியில் சுப்ரமணியசுவாமி சன்னதி கட்டுவதற்காக அஸ்திவாரம்தோண்டப்பட்டது. அப்போது பூமிக்குள் இருந்து ஐம்பொன் சிலைகள்கண்டெடுக்கப்பட்டன.
சோமேஸ்வரர், சிவகாமி அம்மன், சூலாயுதம், பாம்பு, அம்மன், திருஞானசம்பந்தர்,அகாரதேவர், சக்திபீடம், நந்தி, நடராஜர் உள்ளிட்ட 15 சிலைகள் முதல் நாளில் கண்டுபிடிக்கப்பட்டன.
மறுநாள் தோண்டிய போது ஒரு அம்மன் சிலையும், நந்தீஸ்வரர் சிலையும் கிடைத்தன.
கண்டுபிடிக்கப்பட்ட 17 சிலைகளின் மொத்த எடை 679 கிலோ 400 கிராம்,இவற்றின்மதிப்பு 4 கோடி ரூபாய் இருக்கும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்தனர்.
கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள் என்பதால், கோயில் வளாகத்தில்தான்வைக்கப்பட வேண்டும் என்று கிராம மக்கள் போர்க்கொடி தூக்கியதை அடுத்து அதிகாரிகள்அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.