தமிழகத்தில் இன்று
கான்பெரா:
இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அணு இயற்பியல் விஞ்ஞானி பில் மாத்யூ, ஆஸ்திரேலியாவின் க்ளூனிஸ் ராஸ் தேசிய அறிவியல்தொழில்நுட்ப விருது பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய தாதுத் துறைக்கு கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு மேற்கொள்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொடுத்தமைக்காக அவருக்குஇந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் ஆய்வுக்காக செலவிடப்படும் கோடிக்கணக்கான பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
ஆஸ்திரேலியாவில் உள்ள காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வுக் கழகத்தில் (சி.எஸ்.ஐ.ஆர்.ஓ.) விஞ்ஞானியாக உள்ளார் மேத்யூ.
காமா கதிர்வீச்சைப் பயன்படுத்தி நிலக்கரி மற்றும் அதன் தாதுக்களின் இருப்பு குறித்து ஆராய்வதற்கான தொழில்நுட்பத்தை மேத்யூ உருவாக்கியுள்ளார்.இதன் மூலம் கம்ப்யூட்டர் மூலமே இந்த ஆய்வை மேற்கொள்ளலாம். இதனால் ஆய்வுக்குத் தேவைப்படும் கோடிக்கணக்கான பணத்தை மிச்சப்படுத்தமுடியும்.
கேரள மாநிலம் கல்லூப்பரா என்ற இடத்தைச் சேர்ந்தவர் மேத்யூ. 1971-ம் ஆண்டு முதல் சி.எஸ்.ஐ.ஆர்.ஓ. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ஏற்கனவே, 1988-ம் ஆண்டு ஆஸ்திரேலியய சுரங்கத் துறை தொழில்நுட்ப ஆய்வு விருதை மேத்யூ பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications