For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
புதுக்கோட்டை அருகே டாக்டர் வீட்டில் பட்டாசு வெடிப்பு: 2குழந்தைகள் காயம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் கீரமங்கலம் கிராமத்தில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உடல் கருகினார்கள்.
ஆலங்குடியில் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்துப் போலீசார் கூறுகையில், ஹோமியோபதி டாக்டர் ஒருவர் வீட்டில் இச்சம்பவம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் வீட்டிலுள்ள ஸ்டவ் கசிந்து தீ பரவி வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்ததில் இத்தீவிபத்து ஏற்பட்டது.
இத்தீவிபத்தில் டாக்டரின் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. லட்சக்கணக்கில் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கீரமங்கலம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து அனுமதி இல்லாமல் பட்டாசுகளை வீட்டில் வைத்திருந்தது தொடர்பாக அவரைக் கைதுசெய்தனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, May 18, 2000, 5:30 [IST]