மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் அணியில் புதிய இந்தியர்
பிரிட்ஜ்டவுன் (பார்படோஸ்):
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இந்தியவம்சாவழியைச் சேர்ந்த ராம்நரேஷ் சர்வான் சேர்க்கப்பட்டுள்ளார்.
19 வயதான சர்வான், சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணியில் விளையாடினார்.அப்போட்டியில் சர்வான் 75 ரன்கள் அடித்து தனது அணி வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து கிறிஸ் கெய்லுக்குப் பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையே இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் வியாழக்கிழமைதுவங்குகிறது. கயானாவில் நடைபெற்ற முதல் போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்தது.
இரண்டாவது போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி:
ஆடம்ஸ் (கேப்டன்), கேம்ப்பெல், கிரிஃபித், சந்தர்பால், ஹைன்ட்ஸ், சர்வான், ஜேக்கப், ஆம்புரோஸ், மெக்லீன்,வால்ஷ், கிங்.