தமிழகத்தில் இன்று
பெங்களூர்:
கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திற்கு செல்லவில்லை. அவர் அக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களுக்கிடையே காவிரி நீர் பிரச்சனை இருந்து வருகிறது.
இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக காவிரி நதி நீர் ஆணையம் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் 1998 ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து பேச நான்கு தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தை வெள்ளிக்கிழமை டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.
ஆனால், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா நாளை டெல்லி செல்லவில்லை என்று தெரிவித்துவிட்டார். பிரதமர் வாஜ்பாய் என்னிடம் காவிரி நதிநீர்பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு நாளை வருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் எனக்கு இங்கே வேலைகள் இருப்பதால் என்னால் காவிரி நதிநீர்பிரச்சனை குறித்துப் பேச என்னால் அங்கே செல்ல முடியாது. ஒரு வாரம் கழித்து இந்த நான்கு மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று நான்பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன்.
ஜூன் ஆறாம் தேதிக்குப்பின் இந்தக் கூட்டத்தைக் கூட்டச் சொன்னேன். ஆனால் காவிரி பிரச்சனையில் கர்நாடகம் காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பை மீறிநடப்பதாக தமிழ்நாட்டிலிருந்து பிரதமருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதால் இக்கூட்டத்தை அவசரமாகக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
எனக்கு இங்கே வேலைகள் இருப்பதால் நான் நாளை நடக்கும் கூட்டத்திற்குச் செல்லவில்லை.
இவ்வாறு முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா நிருபர்களிடம் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications