தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
குமரியில் கைதிகள் வெட்டிக்கொலை: ஜாமீன் பெற்று வரும் போது விபரீதம்

நாகர்கோவில்:

சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் நிபந்தனை ஜாமீன் பெற்று திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத 20 பேர் கொண்ட கும்பலால்வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

இது குறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கன்னியாகுமரியில் பிரபல ரவுடி நாகராஜன் கொலையில் தொடர்புடைய கார்த்திக் மணிகண்டன்(32), பாபு (35), ராஜ்குமார் மற்றும் ராஜன் ஆகியோர்ஜெயிலில் அடைக்கப்பட்ட கைதிகள்.

இவர்கள் விசாரணைக்காக கோர்ட்டுக்குக் கொண்டுவரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து இவர்கள்நான்கு பேரும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது இரண்டு கார்களில் வந்த ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 20 பேர் கொண்ட கும்பல் அவர்களை மறித்து சராமரியாய்த் தாக்கியது.இதில் கார்த்திக் மற்றும் பாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். ராஜ்குமார் மற்றும் ராஜனுக்கு கோட்டார் மருத்துவமனையில்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கொலைக்குப் பின்னணியில் நாகராஜனின் ஆட்கள் இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

புலன்விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+