தமிழகத்தில் இன்று
கோயம்புத்தூர்:
சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் தேயிலைக்கு மத்திய அரசு மான்யம் அறிவித்துள்ளது.
தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு தொழிலாளர்கள் குறிப்பாக தென் இந்தியாவைச் சேர்ந்த தேயிலைஉற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் தேயிலைக்குத் தகுந்த விலை கிடைப்பதில்லை என்றும் மத்திய அரசுமான்யம் வழங்கவேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
தேயிலை உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கிலோவுக்கு ரூ.1.25 மான்யம் வழங்கப்படும் என்று மத்தியஅரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அடுத்த 6மாதத்துக்கு இது அமலில் இருக்கும் என்றும் தேயிலை வாரியத்தின முதன்மை பிராந்தியச் செயல் தலைவர் விக்ரம்கபூர் தெரிவித்தார்.
தொடர்ந்து 5 வாரங்களுக்கு தேயிலை விலை கிலோவுக்கு ரூ.55-ம் அதிகமாக உயரும் பட்சத்தில் மான்யம் ரத்துசெய்யப்படும். மேலும், அதே காலகட்டத்தில் கிலோ ரூ.55-க்கும் அதிகமாக தேயிலை ஏலம் கேட்கப்படும்பட்சத்திலும் மான்யம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த மான்ய அறிவிப்பு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில்அமல்படுத்தப்படும். இந்த மாநிலங்களில் 10.5 ஹெக்டேருக்கும் குறைவாக தேயிலைத் தோட்டம் வைத்துள்ள சிறுதேயிலை உற்பத்தியாளர்களுக்கு இந்த மான்ய அறிவிப்பு பொருந்தும். அவர்கள், தேயிலைத் தொழிற்சாலைக்குச்சென்று அங்கு வழங்கப்படும் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அனுப்பினால் மான்யம் வழங்கப்படும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications