For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
கைத்தடி ராணுவ முகாமைப் பிடித்தனர் புலிகள்: 100 ராணுவ வீரர்கள் பலி

லண்டன்:

யாழ்ப்பாணத்திற்கு 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கைத்தடி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 100-க்கும்மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ராணுவ முகாமைக் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் லண்டன் அலுவலகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த சண்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும்விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

புதன்கிழமை மாலை கைத்தடி முகாம் மீது புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மிகவும் பாதுகாப்புடன் கூடிய முகாம் கைத்தடி. சுமார் 12 மணி நேரம் நடந்தகடும் மோதலுக்குப் பிறகு ராணுவ முகாம் தங்கள் வசம் வந்ததாக புலிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் வழியில் முக்கியபோக்குவரத்து இடமாக கைத்தடி உள்ளது. இங்கிருந்துதான் யாழ்ப்பாணம் நகருக்குள் உணவு மற்றும் ஆயுதங்களை இலங்கை ராணுவம் எடுத்துச் சென்றுகொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் பலாலி விமான நிலையத்திற்கு இடையில் கைத்தடி உள்ளது. இப்போது புலிகள் வசம் இந்த முகாம் வந்துள்ளதால் யாழ்ப்பாணம்நகரில் உள்ள ஆயிரக்கணக்கான ராணுவத்தினருக்கு உணவு மற்றும் ஆயுத சப்ளை நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

புலிகளின் கடும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவ வீரர்களில் பலர் முகாமிலிருந்து தப்பி ஓடியதாக புலிகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இறந்த ராணுவ வீரர்களின் உடல்களையும் எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் தப்பி விட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவ முகாமிலிருந்த நவீன ஆயுதங்கள், ராணுவ டாங்குகள் போன்றவற்றை புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைத்தடி புலிகள் வசம் வந்துள்ளதால், சாவகச்சேரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் புலிகள் அடுத்துத் தாக்குதல் நடத்துவார்கள்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதிகளில் ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே தொடர்ந்து கடும் சண்டை நடந்து வருகிறது. யாழ்ப்பாணம்நகரில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வாலிகாமம் பகுதிக்குச் சென்று விடுமாறு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களைக் கட்டாயப்படுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றுவதாக கூறப்படும் புகாரையும் புலிகள் மறுத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X