ஐரோப்பிய கால்பந்து: கலடாசரே அணிக்குக் கோப்பை
கோபன்ஹேகன்:
ஐரோப்பிய கால்பந்துக் கோப்பையை துருக்கி நாட்டைச் சேர்ந்த கலடாசரே அணி வென்றுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆர்செனல் அணியை 4-1 என்ற கோல் கணக்கில்அந்த அணி தோற்கடித்தது. வழக்கமான ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் போடவில்லை. அதன் பிறகுவழஙகப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் போடவில்லை.
இரு அணிகளும் தங்களுக்குக் கிடைத்த பல நல்ல வாய்ப்புகளைக் கோட்டைவிட்டன. இதையடுத்து, இறுதியாகபெனால்டி மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிப்பது என முடிவானது. பெனால்டியில் கலடாசரே அணி 4-1 என்றகோல் கணக்கில் வெற்றி பெற்று ஐரோப்பிய கால்பந்துக் கோப்பையை வென்றது.
பெனால்டியில் ஆர்செனல் அணி வீரர்கள் அடித்த பந்துகளைச் சிறப்பாகத் தடுத்து அணிக்கு வெற்றித் தேடித் தந்தகலடாசரே அணியின் கோல் கீப்பரும், பிரேஸில் தேசிய அணியின் கோல்கீப்பருமான டஃபேரல், சிறந்தஆட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக, இறுதி ஆட்டம் துவங்கும் முன் இரு அணி ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 7பேர் காயமடைந்தனர். மோதலில் ஈடுபட்ட ரசிகர்களைத் தடுக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.