For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
இலங்கைப் பிரச்சினை: வைகோவுடன் கனடா தூதர்கள் திடீர் சந்திப்பு

டெல்லி:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோவுடன், கனடா நாட்டுத் தூதரக அதிகாரிகள் டெல்லியிலுள்ள அவரது வீட்டில்சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தனர்.

டெல்லியிலிருந்து வெளிடப்பட்ட மதிமுக அறிக்கையில் இதுகுறித்துக் கூறப்பட்டுள்ளதாவது:

சுமார் 75 நிமிடங்களுக்கு இந்த சந்திப்பு நீடித்தது. இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தீவிர அக்கறை காட்டி வரும் வைகோ, கனடாவின் கவனத்தைக்கவர்ந்துள்ளார். இதையடுத்து அவரை டெல்லி மற்றும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரங்களில் உள்ள கனடா நாட்டுத் தூதரக அதிகாரிகள்வியாழக்கிழமை சந்தித்து இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதித்தனர்.

டெல்லியிலுள்ள கனடா தூதரகத்தின் அரசியல் பிரிவு முதன்மைச் செயலாளர் கிறிஸ் காட்டர், இப்பதவிக்கு அடுத்த வரவுள்ள ஜேம்ஸ் காரிங்கின்,இஸ்லாமாபாத் நகரிலுள்ள கனடா தூதரக ஆலோசகர் கிளைன் பெர்ரி ஆகியோர் வைகோவைச் சந்தித்தனர்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. ஈழத் தமிழர்களின் போராட்டம், அதன் பின்னணி,அவர்களின் பிரச்சினைகள் குறித்து கனடா குழுவினரிடம் விளக்கினேன் என்றார்.

கனடாவில் 3 லட்சம் தமிழர்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் இலங்கைத் தமிழர்கள் உள்ளார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X