தமிழகத்தில் இன்று
லண்டன்:
ஸ்காட்லாந்தில் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கிய ஹெராயின் போதைப் பொருளைத் தின்ற 11 பேர் இறந்தனர்.
சமீபத்தில் ஸ்காட்லாந்தில் ஹெராயின் போதைப் பொருளைப் பயன்படுத்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுமருத்துவமனையில் சிலர் சேர்க்கப்பட்டனர். ஆனால், மருத்துவ சிகிச்சை பலனில்லாமல் 11 பேர் திடீரென்றுஇறந்துவிட்டனர். இவர்களில் பலருடைய உடலில் உயிர்க்கொல்லி வைரஸான ஆந்த்ராக்ஸ்" இருந்தது.
ஆந்த்ராக்ஸ் வைரஸ் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் வடக்கு பாகிஸ்தான் பகுதியில் உள்ளகால்நடைகளின் உடலில் அதிகம் காணப்படுகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்பகுதியில் பயிரிடப்பட்ட ஹெராயினில் ஆந்த்ராக்ஸ் வைரஸ் இருந்து அந்த ஹெராயின் ஸ்காட்லாந்துக்குக்கடத்தப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.
தற்போது, வைரஸ் தாக்கிய ஹெராயின் எப்படி ஸ்காட்லாந்துக்குக் கடத்தப்பட்டது என்பதை போலீஸார் ஆராய்ந்துவருகின்றனர். உயிர்க்கொல்லி ஆந்த்ராக்ஸ் வைரஸ் தாக்கிய ஹெராயினைப் பயன்படுத்தி இறந்த 11 பேரில் 8 பேர்பெண்கள் என்றும் அவர்கள் 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆந்த்ராக்ஸ் வைரஸ் தாக்குதல் குறித்து ஸ்காட்லாந்து மருத்துவர்கள் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.ஆந்த்ராக்ஸ் வைரஸ் பாதித்த ஹெராயின ஐரோப்பிய நகர்களில் விற்கப்படும் வரை இறப்பவர்கள் எண்ணிக்கைமேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications