தமிழகத்தில் இன்று
சென்னை:
காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க முதல்வர் கருணாநிதி டெல்லி சென்றார்.
தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில்பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி நதி ஆணையக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடக்கிறது.
சென்னையிலிருந்து மாலை 5.15 மணிக்கு கருணாநிதி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இந்த கூட்டத்தில் காவிரிப் பிரச்னையை விட, பெரிதான கேரளத்துடனான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை பற்றி விரிவாக விவாதிப்பேன் என்றுமுதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
தமிழகம் - கர்நாடகா இடையிலான காவிரி நதி நீர் பிரச்னையில் பிரதமர் தலைமையில் காவிரி நதி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையக் கூட்டம்டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் நான்கு மாநில முதல்வர்களும் கலந்து கொள்கின்றனர்.
இதுபற்றி வியாழக்கிழமை நடைபெற்ற சட்டசபை விவாதத்தில் பேசிய தேசிய லீக் தலைவர் அப்துல் லத்தீப் குறிப்பிட்டார். அவர் பேசுகையில், ""காவிரிஇல்லாமல் இலக்கியம் இல்லை. எனவே காவிர் பிரச்சனை பற்றி பிரதமருடன் பேசப் போகும் முதல்வர், நிரந்தர தீர்வு காண்பார் என்றுஎதிர்பார்க்கிறோம் என்றார்.
அப்போது முதல்வர் கருணாநிதி குறுக்கிட்டு பதிலளித்தார். முதல்வர் கூறுகையில், ""காவிரி பிரச்சனை ஒன்றும் பூதாகரமானதாக இல்லை. அதற்கானபிரச்னைகளை தீர்த்துக் கொள்ள பிரதமர் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விட்டது. அதில் இருப்பது சின்ன சின்ன பிரச்னைகள் தான். அதைதீர்த்துக் கொள்ளலாம்.
ஆனால், அதை விட முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை தான் பெரியதாக இருக்கிறது. இந்த பிரச்சனை பற்றி தான் விரிவாக பேசுவோம்என்றார் முதல்வர்.
தமிழகம் - கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்என்று தமிழகம் வலியுறுத்தி வருகிறது. அதற்கு கேரளா மறுத்து வருகிறது. இதுபற்றி இரு மாநில முதல்வர்களும் பல முறை பேசியும் தீர்வுகாணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications