For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
மின்சார வினியோகத்தால் நாட்டுக்கு 35 ஆயிரம் கோடி நஷ்டம்!
கோவை:
மின் வினியோகம் மூலம் 35 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. ரூ 15ஆயிரம் கோடி அளவுக்கு மின்சாரம் திருடப்படுகிறது என மத்திய மின் துறைஅமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் தெரிவித்தார். இன்று (19-ம் தேதி)நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி பிரச்சனை தீர்க்க சிவசமுத்திரம், மேகதாது, ஒகேனக்கல், ராசிமணல் ஆகியஇடங்களில் நீர் மின்சாரம் மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
தற்போது மின் வாரியத்திற்கு இதுவரை ரூ 35 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இதற்கு காரணம் மின்சார திருட்டு. மின்சார கணக்கு சரியாக பராமரிக்கப்படாததுதான்.
மின் திருட்டு ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி அளவிற்கு நடக்கிறது. கோவையில்கொச்சி-கரூர் திரவ காஸ் பைப் லைன் மூலம் காஸ் எடுத்து மின் உற்பத்திசெய்யப்படும்.
இவ்வாறு குமாரமங்கலம் கூறினார்.
Comments
Story first published: Friday, May 19, 2000, 5:30 [IST]