தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்க்ைகு ராணவ தளவாடங்களை விற்கலாம். ஆனால், ராணுவத்தை அனுப்பக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர்ஆர்.உமாநாத் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் தமிழர் நலனுக்காக போராடும்அமைப்பல்ல. அது ஒரு தீவிரவாத இயக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைப் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை குறித்துசென்னையில் உள்ள உமாநாத் அளித்த பேட்டி:
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து சி.பி.எம். கவலைகொள்கிறது. இலங்கை பிரச்சனைக்கு தனிஈழம் என்பது தீர்வாகாது. சிங்களஇனவெறியோ, தமிழ் இன வெறியோ பிரச்சனையைத் தீர்க்க உதவாது.
இலங்கைக்குள் ஈழத் தமிழ் மக்கள் சமத்துவமாக வாழும் அடிப்படையில் அமையும்சுயாட்சி அமைப்பே தீர்வாகும். இலங்கை பிரச்சனை வேறு, புலிகள் பிரச்சனை வேறு.தங்களது கருத்தை ஏற்காத தலைவர்களை கொலை செய்தது மூலமாக புலிகள்அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது நிரூபணமாகியுள்ளது.
இந்நிலையில் புலிகள் தலைமையில் தமிழ் ஈழம் என்பது இலங்கையின்ஒருமைப்பாட்டை சீர் குலைத்து, அதை அன்னிய ஏகாதிபத்திய சக்திகளின் ஒருகளமாக ஆக்கிவிடும். இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும்.
இப் பிரச்சனையில் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பக் கூடாது. அதேநேரத்தில் இலங்கை அரசு கோரும் மற்ற அனைத்து உதவிகளையும் மத்திய அரசுஅனுதாபத்துடன் பரீசிலிக்கவேண்டும்.குறிப்பாக போரினால் அவதியுறும் இலங்கைத்தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அளிக்க வேண்டும்.
பா.ம.க.,ம.தி.மு.க., சிவசேனை உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தத்திற்குமத்திய அரசு பணியக் கூடாது. இப் பிரச்சனையில் மத்திய அரசு ஒரு வசதியானதெளிவான நிலை எடுக்க வேண்டும்.
பொறுப்பற்ற முறையில் சொந்த நலன் கருதி இலங்கைத் தமிழ் மக்கள் மற்றும்இந்தியாவின் நலன் சம்பந்தப்பட்ட இப் பிரச்சனையில் தமிழர்களின் ஒன்றுபட்டஜனநாயகக் குரல் நியாயமான அரசியல் தீர்வுக்காக ஓங்கி ஒலிக்க வேண்டும்.
காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டுநடவடிக்கைக்கு சி.பி.எம்தயாராக உள்ளது. எனினும் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும்.இப்போதைக்கு அ.தி.மு.க.வுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஒரு மதச்சார்பற்ற, வகுப்புவாத கட்சியுடன் தேர்தல் நேரத்தில் சமரசம் செய்துகொண்டது என்பதற்காக, அந்த கட்சியும் வகுப்பு வாதக் கட்சி ஆகிவிடாது. இதுதி.மு.க.வுக்கும் பொருந்தும் என்-றார்.












Click it and Unblock the Notifications