தமிழகத்தில் இன்று
புது தில்லி:
தென் இந்திய வான்வெளியில் போதுமான கண்காணிப்பு இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறைக்கும், இந்தியவிமானப் படைக்கும் பாதுகாப்புத் துறையின் கண்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் கண்டனம்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை விவரம்:
தென் இந்தியப் பகுதிகளில் வான்வெளியில் ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க போதுமான கண்காணிப்பும்,பாதுகாப்பும் போதுமானதாக இல்லை. அப் பகுதிகளில் உள்ள விமானப் படை தளங்கள் முழுவீச்சில்செயல்படவில்லை.
1984-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தென் பிராந்திய விமானப் படை இதுவரை முழுவீச்சில் செயல்படத்துவங்கவில்லை. அந்த விமானப் படைக்குப் போதுமான உள் கட்டமைப்புகளும், விமான தளங்களும், நவீனஆயுதங்களும் இல்லாததுதான் இதற்குக் காரணம்.
தென் மாநிலங்களில் 9 தளங்களை அமைக்கும்படி தென் பிராந்திய விமானப் படைக்கு மத்திய அரசு அனுமதிஅளித்துள்ளது. ஆனால், கடந்த அக்டோபர் மாதம் வரை 3 தளங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அதில்ஒன்றில் தக்க உள் கட்டமைப்பு வசதிகளும், விமானங்களைப் பராமரிக்கவும், பழதுபார்க்கவும் போதுமானஉபகரணங்களும் வசதிகளும் இல்லை.
அந்தமான்-நிக்கோபார் தீவுகள் பகுதியில் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் வேளையில், அகு ஒரே ஒரு தளம்மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகமும், விமானப் படையும் அதிக கவனம்செலுத்தாதது போல் உள்ளது.
பல்வேறு குறைபாடுகளுடன் விமான தளங்கள் அமைப்பதால் எந்தப் பலனும் இல்லை. அதிகரித்து வரும்அச்சுறுத்தல்களுக்கு ஏற்ற வகையில் விமானப் படையும், மத்திய பாதுகாப்புத் துறையும் உடனடியாகச் செயல்பட்டுதக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது மிகவும் அவசியம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications