தமிழகத்தில் இன்று
சென்னை:
மதுரையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைப்பதற்கான கட்டிடம் கட்டுவது குறித்த விவாதங்கள் நடத்துவதற்குத் தன் தலைமையில் கமிட்டி ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து அரசுஉயர்அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மதுரையில் உயர்நீதிமன்றத்தின் கிளை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. கட்டிடப் பணிக்கான ஆரம்பக் கட்ட வேலைகள் விரைவில்தொடங்கப்படும். இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி தவறான முறையில் பயன்படுத்தப்படாது.
இந்தப் பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வரும். கட்டிடப்பணிகள் குறித்து ஆலோசனைகள் நடத்த சென்னைஉயர்நீதிமன்றம் பொதுப்பணித்துறை அதிகாரி, ஐஏஎஸ் அதிகாரி, நீதிமன்ற பார் கவுன்சில் உறுப்பினர்கள் ஆகியோரை நியமிக்கும்.
விரைவில் கட்டிடப் பணிக்கான ஆரம்ப கட்ட வேலைகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ.