தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் அதிகம் உள்ள சிலிகான்பள்ளத்தாக்குக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் பயணம் மேற்கொள்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தைத் துவங்கும் அவர், இரு நாட்கள் அங்கு இருப்பார். தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டங்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை ஈடுபடுத்துவதுகுறித்து அமைச்சர் ஆராய்வார்.
இது தொடர்பாக, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் சிலிகான் பள்ளத்தாக்கில் கம்ப்யூட்டர் துறையில்சிறந்த விளங்கும் இந்திய நிறுவனங்களின் தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்துவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ந்து வரும் இன்டர்நெட் புரட்சியில் இந்தியாவை முன்னணியில் நிறுத்தும்பொருட்டு தகவல் தொழில்நுட்பத்துறையில் பல புதிய நவீன திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு சிலிகான் பள்ளத்தாக்கில்உள்ள இந்தியர்களின் உதவியைக் கோரும் பொருட்டும் அமைச்சரின் பயணம் இருக்கும்.
சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள்இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சருடன் தகவல் தொழில்நுட்பத் துறை உயர் அதிகாரிகள், அரசுச் செயலர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக்குழுவும் சிலிகான் பள்ளத்தாக்கு செல்கிறது.
யு.என்.ஐ.