For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
வரி ஏய்ப்பு புகார்: தென் கொரிய பிரதமர் ராஜினாமா
சியோல்:
வரி ஏய்ப்பு புகாரையடுத்து தென் கொரியா நாட்டின் பிரதமர் பார்க் டே ஜூன் வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சொத்துக் கணக்கில் குளறுபடி, வரி ஏய்ப்பு ஆகியவை தொடர்பாக ஜூன் மீது புகார் கூறப்பட்டது. 1980 மற்றும் 1990ம் ஆண்டுகளுக்கு இடையே,போஹாங் இரும்பு மற்றும் உருக்கு நிறுவன தலைவராக இருந்தபோது அவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
இந்தப் புகாரையடுத்து ஜூன் தனது பதவியை ராஜினாமா செய்தார். நிதியமைச்சர் லீ ஹுன் ஜெய் தற்காலிக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments
Story first published: Friday, May 19, 2000, 5:30 [IST]