தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்-தி-ய வறட்சி நிவாரணத்-துக்-கு அமெரிக்க -தூ-த-ர-கம் ரூ. 2 கோடி உதவி
புது தில்லி:
குஜராஜ், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் நிலவும் கடுமையான வறட்சியால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ள இந்தியாவில் உள்ளஅமெரிக்கத் தூதரகம் ரூ.2 கோடி நிதி அளித்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் இந்த நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதாக தூதரகம்தெரிவித்துள்ளது. நிதியாக ரூ.1.10 கோடியும் உணவு, துணி மற்றும் மருந்துகள்மூலமாக ரூ.90 லட்சத்துக்கு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. ரூ.1.10 கோடிக்கானகாசோலையை அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு எஃப். செலெஸ்டி, பிரதமர் அலுவலகத்தில்வழங்கினார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும்அமெரிக்க மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொள்வதாகக்கூறியுள்ளார் ரிச்சர்டு எஃப். செலெஸ்டி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications