தமிழகத்தில் இன்று
டெல்லி:
டெல்லியில் வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த காவிரி நதி நீர் பிரச்சனை குறித்த முதல்வர்கள் கூட்டத்தை கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாபுறக்கணித்ததையடுத்து அக்கூட்டம் மறுதேதியின்றி ஒத்திவைக்கப்பட்டது.
காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு பிரதமர்வாஜ்பாய் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடப்பதாக இருந்தது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் வியாழக்கிழமை பெங்களூரில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்டி இப்பிரச்சனை குறித்து அவர்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் தான் டெல்லியில் நடக்கவுள்ள கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தார்.
காவிரி நதி நீர் ஆணையத்தின் இடைக்காலத் தீர்ப்புப்படி தமிழகத்துக்குக் கர்நாடகம் 205 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்து விட வேண்டும். ஆனால் கர்நாடகம்இதுவரை 267 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட்டுள்ளது. இந்தப் பிரச்சனையில் கர்நாடகம் மத்திய அரசுடனோ, மாநில அரசுடனோ மோதல்போக்கைக் கடைபிடிக்க விரும்பவில்லை.
காவிரி நதிநீர்ப் பிரச்சனை குறித்து விவாதிக்க நான்கு மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இப்பிரச்சனை குறித்துவிவாதிக்க எனக்கு போதிய கால அவகாசம் தருமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன். ஜூன் ஆறாம் தேதிக்குப் பின் இக்கூட்டத்தைக் கூட்டும்படி நான் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
ஆனால் அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து நான் வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றார்.
முதல்வர்கள் கூட்டம் ஒத்திவைப்பு:
கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் புறக்கணிப்பால் வெள்ளிக்கிழமை நடப்பதாக இருந்த நான்கு மாநில முதல்வர்கள் கூட்டம் மறுதேதியின்றிஒத்திவைக்கப்பட்டதாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications