தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கை அமைச்சர் லட்சுமண் கிர்லோ பண்டாரநாயகா சென்னை வந்துள்ளார். சமீபத்தில் இலங்கை ராணுவத்தளபதி ரோஹன் டிசில்வா சென்னை வந்து சென்றதைத் தொடர்ந்து இலங்கை அமைச்சர் சென்னை வந்துள்ளதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வரும் வேளையில் சிலநாட்களுக்கு முன் இலங்கை ராணுவத் தளபதி சென்னை வந்தார். பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள்பயிற்சி அகாதெமியில் இந்திய ராணுவ அதிகாரிகளுடன் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தி விட்டுச்சென்றார்.
இந் நிலையில் இலங்கை அமைச்சர் லட்சுமண் கிர்லோ பண்டாரநாயகா சனிக்கிழமை காலை 6.30-க்கு சென்னைவந்தார். இலங்கை நாட்டு சிறப்-பு விமானம் மூலம் சென்னை வந்த அவர், ராணுவ அதிகாரிகள் பயிற்சிஅகாதெமிக்குச் சென்றார். அங்கு காலை 11.30 மணி வரை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர்11.45-க்கு விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.
இலங்கையிலிருந்து அடுத்தடுத்து ராணுவத் தளபதியும், அமைச்சரும் சென்னை வந்து ராணுவ அதிகாரிகளிடம்ஆலோசனை நடத்தி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிடம் ராணுவ உதவிகேட்பதற்காக இவர்கள் இருவரும் சென்னை வந்து சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.