தமிழகத்தில் இன்று
ஆந்-தி-ரா-வுக்-கு கடத்-தப்--பட்-ட தமி-ழ-க ரேசன் கடை அர--சி
சென்னை:
சென்னை போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஆந்திராவிற்குகடத்தப்பட்ட 141 மூட்டை ரேஷன் அரிசி கைப்பபற்றப்பட்டது.
இது தொடர்பாக 2 பேர் கைது செய்ய-பட்-ட-னர். தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசியைகடத்தப்படுவது தொடர்கிறது. அடித்தட்டு ஏழை மக்களுக்கு அரசு மானிய விலையில்வழங்கும் ரேஷன் அரிசியை, அதிகாரிகள் ஒத்துழைப்புடன் வெளி மாநிலங்களுக்குகடத்தி விற்கும் வியாபாரப் போக்கு பெருகி வருகிறது.
லாரிகளில் மட்டுமின்றி, ரயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை கடந்த மாதம்போலீசார் கண்டு பிடித்தனர். பெங்களூருக்கு கடத்தப்பட்ட அரிசி மூட்டைகளைபோலீசார் கண்டு பிடித்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களை கைது செய்தனர்.
இப்போது அரசு அளித்த உறுதி மொழியின் அடிப்படையில் ரேஷன் அரிசி கடத்தல்தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன் விளைவாகசென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட 141 மூட்டை ரேஷன் அரிசியை,லாரியுடன் போலீசார் கைப்பற்றினர்.
தமிழகம்- ஆந்திரா எல்லைப் பகுதியான பால கிருஷ்ணாபுரத்தில் லாரியை போலீசார்மடக்கிப் பிடித்தனர். இந்த கடத்த்ல தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வேலாயுதம்,ஆந்திராவை சேர்ந்த சுப்ரமணியம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து டாட்டா சுமோ கார் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல்விஜயகுமார் என்பவர் தேடப்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications