தமிழகத்தில் இன்று
நாடு முழுவதும் ஒரே மாதிரியான விற்பனை வரி தான் இருக்க வேண்டும் என்பதற்காகசமச்சீர் வரி முறையை அறிமுகப்படுத்துவது என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்தமாநில முதல்வர்கள் மற்றும் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் முடிவு செய்து தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
இந்த சமச்சீர் வரி முறையை கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து அமல்படுத்துவதுஎன்று முடிவு செய்யப்பட்டது. அனைத்து மாநில முதல்வர்களும், நிதி அமைச்சர்களும்இந்த முடிவை ஏற்றுக் கொண்டனர்.
ஆனால், பீகார், பாண்டிச்சேரி இந்த இரு மாநிலங்களும் இதுவரை சமச்சீர் வரியைஅமல் படுத்தவில்லை.
இதனால், பீகார் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் மீது கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும் என்று மாநில நிதி அமைச்சர்களின் நிதிக்குழு தெரிவித்துள்ளது.
கூடவே இன்னும் 7 நாட்களுக்குள் சமச்சீர் வரியை அமல் படுத்த வேண்டும்இல்லையென்றால், இந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் திட்ட ஒதுக்கீட்டில் 25சதவீதம் குறைக்கப்படும் என்றும் நிலைக்குழு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications