For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
காஷ்மீரில் 55 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் சிக்கின
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 55 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்களைராணுவத்தினர் பறிமுதல் செய்தனர்.
பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் என்ற இடத்தில் இந்த வெடிபொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. வெடிபொருட்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், ஆறுவெடிபொருள் கருவிகள் ஆகியவை பிடிபட்டன.
55 கிலோ ஆர்.டி.எக்ஸ், ஆறு வெடி பொருள் கருவிகள், ஒரு கென்வுட் ரேடியோ, 21மின்சார டெட்டனேட்டர், 24 மின்சார ஸ்விட்சுகள், ஆறு பென்சில் வெடிபொருட்கள்,12 மின்சார டெட்டனேட்டர், 36 டெட்டனேட்டர், ஆறு பாட்டரிகள், 46 பிஸ்டல்ஆகியவை கைப்பற்றப்பட்டன.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள தந்தி தாரா கிராமத்தில் இந்த வெடிபொருட்கள்ராணுமவத்தினர் பறிமுதல் செய்தனர்.
Comments
Story first published: Sunday, May 21, 2000, 5:30 [IST]