தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு வாக்களிக்க மாட்டோம் என பெரும்பாலானஅமெரிக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சி.பி.எஸ். டி.வி நிறுவனமும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் சேர்ந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரிய வந்துள்ளது. 57 சதவீத அமெரிக்கர்கள்கிளிண்டனுக்கு எதிராகவும், 39 சதவீதம் பேர் கிளிண்டன் போட்டியிட்டால் அதுகுறித்துப் பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளனர்.
அமெரிக்கச் சட்டப்படி ஒருவர், இருமுறைக்கு மேல் அதிபர் பதவி வகிக்க முடியாது. கிளிண்டன் இருமுறை அதிபர் பதவியில் இருந்துள்ளார். இந்த நிலையில்ஒருவேளை கிளிண்டனுக்கு மூன்றாவது முறை போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று இந்த கருத்துக் கணிப்பில்கேட்கப்பட்டிருந்தது.
மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் கிளிண்டன் போட்டியிடுவார் என்று 66 சதவீத அமெரிக்கர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். அவர் வெற்றிபெறுவாரா என்ற கேள்விக்கு இல்லை என்று 56 சதவீதத்தினரும், ஆமாம் என்று 32 சதவீதத்தினரும் பதிலளித்தனர்.
இதற்கிடையே, இந்தக் கருத்துக் கணிப்பு தேவையில்லாதது என்று வெள்ளை மாளிகை கருத்துத் தெரிவித்துள்ளது. செய்தித்தொடர்பாளர் நந்தா சித்ரே கூறுகையில்,22-வது சட்டத் திருத்தத்தின்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியை வகிக்க முடியாது என்பது தெளிவாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications