தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அடுத்த வாரம் முதல் ஏவுகனைத் தயாரிப்பில் இறங்குகிறது ஈரான்
துபாய்:
அடுத்த வாரம் முதல் புதிய வகை விமான எதிர்ப்பு ஏவுகனைகளைத் தயாரிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.
ஈரான் நாட்டு அரசு தொலைக்காட்சியான குனா இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் ஏழு பெரிய திட்டங்கள் துவக்கப்படவுள்ளன.அரசின் பாதுகாப்புத் துறையும், நிரூ பாட்டரி தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இந்தத் திட்டங்களை நிறைவேற்றவுள்ளன.
விமான எதிர்ப்பு ஏவுகனைகள், ஏர் கம்ப்ரஸ்ஸர்கள், உயர் அழுத்த மின்சார பானல்கள் உள்பட ஏழு திட்டங்கள் இவை. தலைநகர் டெஹரான், கிலான்,குஸஸ்தான் ஆகிய நகரங்களில் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
ஈரான்-ஈராக் போரின்போது, ஈராக்கின் ஆக்கிரமிப்பிலிருந்து எல்லைப்புற நகரான கொரராம்ஷார் நகர் விடுவிக்கப்பட்ட தினமான மே 23-ம்தேதியை நினைவுகூறும் விதத்தில் இந்தத் திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications