For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
பிஜி பிரதமர் செளத்ரி ராஜினாமா: விரைவில் விடுவிக்கப்படுவார்

சுவா:

புரட்சிக்காரர்களின் பிடியில் உள்ள பிஜி தீவு பிரதமர் மகேந்திர செளத்ரி ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளாகவும் விரைவில் அவர் விடுவிக்கப்படுவார்என்றும் பிஜி தீவு வானொலி கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமை பிஜித் தீவில் ஜார்ஜ் ஸ்பிட் என்பவரது தலைமையில் ஆயுதப் புரட்சி நடந்தது. அன்று முதல் செளத்ரி நாடாளுமன்ற வளாகத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவரை புரட்சிக்காரர்கள் அடித்துத் துன்புறுத்துவதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த நிலையில், மகேந்திர செளத்ரி ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளதாகவும், எனவே விரைவில் அவர் விடுவிக்கப்படுவார் என்றும்புரட்சிக்காரரர்கள் கூறியதாக பிஜி வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, சனிக்கிழமை இரவு மூன்று உள்ளூர் பத்திரிகையாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போதுபிரதமர் மகேந்திர செளத்ரியின் வலது கண் வீங்கியிருந்ததாகவும், அடித்துத் துன்புறுத்தியதால் இந்த வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X