தமிழகத்தில் இன்று
திருப்பதி:
ஆந்திர மாநில மக்களின் எதிர்ப்புகளையும் மீறி சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் விடப்படுவதாக தெலுங்கு தேசதிருப்பதி எம்.எல்.ஏ. சடலவாடா கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
திருப்பதியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தெலுங்கு-கங்கை திட்டத்தின் படி சென்னைக்கு கிருஷ்ணா நீர் வழங்குவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுஒப்புக்கொண்டார். இதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணா நீர் சென்னைக்கு திறந்து விடப்பட்டது.இதன் காரணமாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ராயல்சீமா மற்றும் நெல்லூர் மாவட்ட மக்களின் பலத்தஎதிர்ப்பை தெலுங்கு தேச கட்சி சந்திக்க இருந்தது.
பொதுமக்கள் எதிர்ப்பை காரணம் காட்டி தமிழக அரசின் கோரிக்கையை ஆந்திரமுதல்வர் சந்திரபாபுநாயுடுமறுத்திருக்கலாம். ஆனால் குடிநீர் பற்றாக்குறையால் வாடும் சென்னை மக்களின் துயரத்தை கருத்தில் கொண்டுகிருஷ்ணா நீரை வழங்கினார்.
இது சந்திரபாபு நாயுடு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் தன்மை கொண்ட தலைவர் என்பதையும், அவரதுபெருந்தன்மையையும் காட்டுகிறது. ஆனால் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையைதேவையில்லாமல் அரசியலாக்குகிறார்கள் என்றார் அவர்.