தமிழகத்தில் இன்று
சென்னை:
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் பிரச்சனைகளை கண்டறிய தமாகா சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் தலைமையில் மூவர் குழுவை அக்கட்சித் தலைவர் ஜி.கே.மூப்பனார் நியமித்துள்ளார்.
தேயிலை விலை என்றும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அடுத்து தேயிலை விவசாயிகள் நீலகிரிமாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இப்பிரச்சனை குறித்து ஆராய மூவர்குழுவை மூப்பனார் நீலகிரி அனுப்புகிறார்.
இதுகுறித்து சென்னையில் சனிக்கிழமை மூப்பனார் வெளியிட்ட அறிக்கை:
பச்சைத் தேயிலைக்கு கட்டுப்படியான விலை தரவேண்டும் என்று வலியுறுத்தி நீலகிரி விவசாயிகள் போராட்டம்நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகளை நேரில் சந்தித்துப் பிரச்சனை குறித்து ஆராய்வதற்காக மூவர் குழுநியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்தலைமையில் தமாகா பொதுச் செயலாளர்கள் கந்தசாமி, மண்டலச் செயலாளர் எம்.ஏ.ஹக்கீம் ஆகியோர்இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் விவசாயிகளை சந்தித்து கருத்துக்களை அறிந்து அறிக்கை தர பணிக்கப்பட்டுள்ளனர் என்றுஅறிக்கையில் மூப்பனார் கூறியுள்ளார்.