தமிழகத்தில் இன்று
சென்னை:
எல்லா நதிகளையும் தேசியமயமாக்க வேண்டும் என்று டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தில்தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.
மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்றது.
பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
முதன்முதலில் மத்திய மாநில உறவுகள் குறித்து ஆராய நீதிபதி ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசுதான் அமைத்தது. அந்த குழுவின்பரிந்துரைகளை சட்ட வல்லுநர்கள் குழுவும் ஆராய்ந்தது. இந்த மாநில கவுன்சிலர் கூட்டம் இப்போது விவாதித்து எடுக்க வேண்டிய முக்கியமான பிரச்சனைஒன்று உள்ளது. அதாவது சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு கவர்னரும், ஜனாதிபதியும் எத்தனை நாட்களுக்குள்அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானித்தாக வேண்டும்.
அடுத்ததாக மாநில அரசுகளை கலைப்பது பற்றிய பிரச்சனை முக்கியமானது. இதைப் பற்றி நாம் அவசியம் விவாதிக்க வேண்டும். இதுதொடர்பாகபொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய அரசுநினைத்தால் அரசியல் சட்டம் 356 வது பிரிவை பயன்படுத்தி எந்த நேரத்திலும் மாநில அரசைக் கலைக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதைமாற்றியாக வேண்டும். அரசியல் சட்டத்தில் இருந்து 356 வது பிரிவை நீக்கியாக வேண்டும்.
அதேபோல் மாநில அரசுகளின் அதிகார வரம்பில் மத்திய அரசு தலையீடு தடுக்கப்பட வேண்டும். இத்தகைய தலையீடு தேவையற்றது என்பது எங்கள்கருத்து. இப்படி தலையிடுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்டத்தின் 365 வது பிரிவையும் நீக்க வேண்டும்.
நதிநீர் பிரச்சனைகள் இழுபறி நிலையில் இன்னமும் நீடிக்கக் கூடாது. இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமானால் எல்லா நதிகளையும்தேசியமயமாக்க வேண்டும். இது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வாக அமையும். அதற்கு முன்பாக நதிநீர் பிரச்சனை தொடர்பான நடுவர் மன்றத் தீர்ப்பைசம்பந்தப்பட்ட மாநிலங்கள் இரண்டாண்டுக்குள் அமல்படுத்தியாக வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட வேண்டும்.
சில மாநிலங்கள் இதுபோன்ற உத்தரவை காலதாமதப்படுத்தி வருகிறது. அதையும் நாம் கவனத்தில் கொண்டு விவாதிக்க வேண்டும் என்றார் முதல்வர்கருணாநிதி.












Click it and Unblock the Notifications