தமிழகத்தில் இன்று
கோயம்புத்தூர்:
மக்களுக்கு சேவை செய்யத் தான் காவல்துறை. அதிகாரம் செலுத்த அல்ல என்பதை போலீஸாருக்கு புரிய வைத்து வருகிறோம் என ரயில்வே போலீஸ்ஐ.ஜி. திலகவதி கூறினார்.
கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் ஓடும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்களில் திருட்டு நடந்து வருகிறது. பிஸ்கட்கொடுத்து மயக்கித் திருடும் கும்பலை கைது செய்த பின் இத்தகைய குற்றம் குறைந்துள்ளது.
திருட்டைத் தடுக்க அரசிடம் கூடுதல் படை கேட்டுள்ளோம். இதுவரை 76 சதவீத குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
பின்னர், காவல் உதவி மையத்தைத் திறந்து வைத்து அவர் பேசுகையில், மக்களுக்கு சேவை செய்யத்தான் காவல்துறை என்பது காவல்துறையினருக்குபுரியவில்லை. அதிகாரம் செலுத்துவதற்கே இத்துறை என்ற நினைப்பில் பலர் உள்ளனர். இக்கருத்து தவறு என்பதை புரிய வைத்து வருகிறோம் என்றார்அவர்.












Click it and Unblock the Notifications