For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து

By Staff
Google Oneindia Tamil News
பிஜி பிரதமரைக் கொல்வதாக மிரட்டவில்லை: புரட்சிக்காரர்கள் மறுப்பு

வெலிங்டன்:

பிஜி தீவு பிரதமர் மகேந்திர செளத்ரியைக் கொலை செய்வதாக மிரட்டவில்லை என்றுபுரட்சிக்கார்ரகள் கூறியுள்ளனர்.

பிஜித் தீவில் ஆயுதம் தாங்கிய ஒரு குழு புரட்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்மகேந்திர செளத்ரியைக் கவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடித்துள்ளது. நாடாளுமன்றவளாகத்தில் செளத்ரி மற்றும் அரசு எம்.பிக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் பிரதமரைக் கொன்று விடுவதாகபுரட்சிக்காரர்கள் மிரட்டியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதையடுத்துநாடாளுமன்றத்திற்கு வெளியே சிறப்பு ராணுவப் படையை குவிக்குமாறு அதிபர் மாராஉத்தரவிட்டார்.

தன்னைச் சந்திக்க நரம் கேட்டு புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் அனுமதிகேட்டிருந்தார் எனவும், ஆனால் அதற்குத் தான் அனுமதி அளிக்கவில்லை என்றும்அதிபர் மாரா கூறியுள்ளார். அவர் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆயுதமுனையில் சிறை வைத்திருப்பவர்களுடன் பேச நான் விரும்பவில்லை. அவர்கள்முதலில் விடுவிக்கப்பட வேண்டும். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால்,ஒவ்வொருவராக கொலை செய்யப்படுவார்கள்என்று அவர்கள் கூறுவதாகத்தெரிகிறது என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிரதமரைக் கொன்று விடுவதாக மிரட்டவில்லை என்றுபுரட்சிக்காரர்கள் கூறியுள்ளனர். ஸ்பீட் கூறுகையில், எங்களது கோரிக்கைகளுக்காகதேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொல்வோம் என்று கூறுவதுபொறுப்பற்ற புகார். அவர்களது உயிருக்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன் என்றார்.

ரபுகா எச்சரிக்கை:

இந்த நிலையில், பிரதமர் மகேந்திர செளத்ரி உள்பட எம்.பிக்களை சிறைவைத்துள்ளதன் மூலம் பிஜி தீவு மக்களின் கோபத்தை புரட்சிக்காரர்கள் பெறநேரிடும்என்று முன்னாள் ராணுவத் தளபதி சிட்டிவெனி ரபுகா, ஆயுதப் புரட்சிக்காரர்களுக்குஎச்சரிக்கை விடுத்துள்ளார்.

புரட்சிக்காரர்களுக்கும், அரசுக்கும் இடையே சமரசப் பேச்சு நடத்தி வரும் ரபுகாகூறுகையில், தங்களது புரட்சி மூலம் பிஜி இனத்தவர்களிடையே பிளவை ஏற்படுத்தும்அபாயத்தை புரட்சிக்காரர்கள் உருவாக்கி விட்டனர். இதனால் அவர்களுக்குப் பலன்ஏதும் கிடைக்கப் போவதில்லை.

புரட்சிக்காரர்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன். ஆனால் அவர்களதுவழிமுறையில் எனக்கு உடன்பாடில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புரட்சிக்காரர்களை ஆதரிக்கவிலலை. சிலர்அதிபருக்கு ஆதரவாக உள்ளனர்.சிலர் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படிஇருந்தால், அது நாடாளுமன்றத்திலும் பிளவை ஏற்படுத்தும். இது பிஜிஇனத்தவர்களுக்க நல்லதல்ல. பிஜிக்கும் நல்லதல்ல என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X