For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து

By Staff
Google Oneindia Tamil News
ஜெ-ய-ல-லி-தா-வுக்கு -க-ரு-ணா-நி-தியின் பல கேள்-வி-கள்

சென்னை:

தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையை வைத்-துக் கொண்-டு -முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் -கற்பனை கலந்த நீண்ட கதை-யைஅ-றிக்-கை-யா-க வெளி-யிட்-டுள்-ளார் என -மு-தல்-வர் க-ரு-ணா-நி-தி கூறி-னர்.

இதுகுறித்து முதல்வர் கருணா-நிதி திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையை ஒட்டி -முன்னாள் -முதல்வர் ஜெயலலிதாவின் -நேற்றைய அறிக்கை கற்பனை கலந்த நீண்ட கதை.ஜெயலலிதாவின் அறிக்கையின் ஆரம்பமே "-முதல்வர் கருணா-நதியின் ஆடம்பர விளம்பரங்கள், வெற்று வேட்டுத் திட்டங்கள் ஆகியவற்றால் தமிழகஅரசின் -நிர்வாகம் சீர்கேடு அடைந்திருப்பதை பற்றி தலைமை தணிக்கை அதிகா-ரி கொடுத்த அறிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆடம்பர விளம்பரங்கள் ஜெயலலிதா ஆட்சியிலே செய்யப்பட்டதா அல்லது தற்போது -நடைபெறுகிறதா என்பது தமிழ்நிாட்டு மக்களுக்குத் தெ-ரியாதாஎன்ன? ஜெயலலிதா ஆட்சியிலே தெருவிற்கு -மூன்று வீதம் ஜெயலலிதாவின் வானுயர கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தனவே.

அப்படி ஏதாவது ஒரு கட்அவுட் இந்த ஆட்சியிலே எங்கேயாவது வைக்கப்பட்டதுண்டா?

ஜெயலலிதா வீட்டை விட்டு புறப்பட்டவுடன் அவர் போய்ச் சேருகிற இடம் வரை அனைத்துப் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டனவே, அப்படிஏதாவது ஒரு சிறு அளவிலாவது இப்போது நிறுத்தப்படுகிறதா? கோட்டைக்குள் நுழைவதற்கு ஒரு வழி, கோட்டையிலிருந்து வெளியே வருவதற்கு ஒரு வழிஎன்று இப்போது உள்ளது. ஆனால், ஜெயலலிதா ஆட்சியின் போது ஜெயலலிதா மட்டும் செல்வதற்காகவே ஒரு வழி, அந்த வழியாக வேறு யாரும்நுழைய -முடியாது.

இப்படிப்பட்ட ஆடம்பரங்கள் இப்போது ஏதாவது செய்யப்படுகிறதா? ஜெயலலிதா கலந்து கொள்கிற ஒரு விழா மேடையிலே கழிவறைகட்டுவதற்காக மூன்றரை லட்சம் செலவழிக்கப்பட்ட கதையெல்லாம் மறந்து விட்டதா?

98-99ம் ஆட்சியில் 3,437 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை பற்றி ஜெயலலிதா கூறியுள்ளார். ஜெயலலிதா ஆட்சியிலே வாங்கியகடன்களுக்கும் சேர்த்து வட்டியாக 2,422 கோடி ரூபாய் தரப்பட்டதும் இந்த பற்றாக்குறை உயர்வுக்கு காரணம்.

அதிமுக ஆட்சியில் 18 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் இருந்தன. அத்தனையும் ஒழிக்க -முடியாவிட்டாலும், இரண்டு லட்சம் கார்டுகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. -முழுவதையும் ஒழிப்பதற்கான -முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

அரசு விமானம் விற்கப்படாததால் 39.55 கோடி ரூபாய் நஷ்டம் என்று தணிக்கை அதிகாரி குறிப்பிட்டுள்ளதாக ஜெயலலிதா சொல்கிறார். இந்தவிமானம் வாங்கப்பட்டதே ஜெயலலிதா ஆட்சியில் தான். அதை -நாங்கள் விற்க -மு-யற்சித்த போதும் யாரும் வாங்க -முன் வரவில்லை.

ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 10.81 கோடி ரூபாய் செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறியுள்ளார். அப்படி எந்தஇடத்திலும் தணிக்கை அதிகாரி கூறவில்லை. அரைகுறையாக அறிக்கையை படித்து விட்டு இவ்வாறு கூறுகிறார்.

அரசாங்கத்தின் மீது ஏதோ புழுதிவாரித் தூற்றிட வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்ட அறிக்கையாகவே ஜெயலலிதாவின் அறிக்கைஇருக்கிறது என்று -முதல்வர் கருணா-நிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X