தமிழகத்தில் இன்று
ஜம்மு:
ஜம்முவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். தோடா மாவட்டம் பானிகால் பகுதியில் ஏற்பட்டதுப்பாக்கிச் சூட்டில் இவர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் ராஜோரி, தோடா மாவட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்ககும் இடையே துப்பாக்கிச் சண்டைநடந்தது.
இச்சம்பவத்தில் ஹர்ஹத் உல் ஜெகாதி இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகளும், 3 ராணுவ வீரர்களும் பலியானார்கள்.
அப்பகுதியிலிருந்து தீவிரவாதிகள் விட்டுச்சென்ற பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
சுமார் 2 மணிநேரம் இந்த துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்தது. இந்தச் சம்பவத்தில் முகமது அசீஸ், சபீயூல் ரஹ்மான், அப்துல் வஹீத் ஆகியதீவிரவாதிகளின் சடலங்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ராணுவ வீரர்கள் ரமேஷ் குமார், அசோக் சிங், விஜய குமார் ஆகியோரின் உடல்களும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில் ஏகே 47 ரக விமானங்கள், வயர்லெஸ் ரேடியோக்கள், ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருட்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.