கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
வில்கெஸ் பாரே (அமெரிக்கா):
தரையிறங்க முற்பட்ட விமானம் வெடித்துச் சிதறியதில் 19 பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இந்த விமான விபத்து அமெரிக்காவின், பென்சல்வேனியாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடந்தது.
விமான இலாகா அதிகாரிகள் இதுகுறித்துக் கூறுகையில், அட்லாண்டிக் நகரிலிருந்து பிஏ 31 ஜெட்ஸ்டீரீம் ரக விமானம் அங்கிருந்து நியூஜெர்சி நோக்கிவந்துகொண்டிருந்தது. அப்போது மோசமான வானிலை காரணமாக வில்கெஸ் பாரே சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போதுவிமானம் வெடித்துச் சிதறி அதிலிருந்த 19 பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்தார்கள்.
இந்த விபத்தினால் அப்பகுதியிலிருந்து 14 கிலோமீட்டர் வரை சேதம் இருந்தது. விமான என்ஜினில் கோளாறு ஏற்பட்டதே இப்பவிபத்துக்குக் காரணம்என்று விமான இலாகா உயர்அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானம் 1988ம் ஆண்டு கட்டப்பட்டது.
இதே போன்ற விபத்து கடந்த பிப்ரவரி 10 ம் தேதி நியூயார்க்கில் ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்தை தேசிய போக்குவரத்து பாதுகாப்பு போர்டுஅதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications