உலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை

Subscribe to Oneindia Tamil
தமிழக அரசியல் மாற்றத்திற்கு புதுவையில் பிள்ளையார் சுழி: மூப்பனார்

சென்னை:

தமிழகத்தில் வரும் தேர்தலில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றத்திற்கு புதுவையில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்ஜி.கே.மூப்பனார் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினை தினத்தையடுத்து அவருக்கு மூப்பனார் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும். அதற்கான பிள்ளையார் சுழி புதுவையில் போடப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி மிகவும் நல்ல மனிதர். அவர் தமிழ்நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்டது நமக்குக் கிடைத்த கரும்புள்ளி. அவர் இளைஞர்களுக்காக பல நல்லதிட்டங்களும், நாடு உயர பல நல்ல திட்டங்களும் தீட்டினார். அவர் கனவு கண்ட இந்தியா உருவாக நாம் அனைவரும் பாடு பட வேண்டும்.

நாம் எடுத்த சபதத்தை முடிக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு நல்ல தொடக்கம் இருக்க வேண்டும். புதுவையில் அதற்கான பிள்ளையார் சுழிபோடப்பட்டுள்ளது. கண்டிப்பாய் அதன் எதிரொலியாக தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+