தமிழகத்தில் இன்று
சென்னை:
முல்லைப் பெ-ரியாறு அணை பிரச்னையில் -மு-தல்-வர் க-ரு-ணா-நி-தி வர-லாற்-றுப் பிழை செய்-து-விட்-ட-தா-கக் கூறி அ-த கண்-டித்-து தமாகாவும்,தமிழக காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஜூன் 2ம் தேதி தேனியில் கூட்டுப் போராட்டம் -நடத்துகின்றன.
இதற்கான அறிவிப்பை சென்னையில் புதன்கிழமை தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனார், தமிழக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர்கூட்டாக வெளியிட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை வருமாறு:
முல்லைப் பெ-ரியாறு அணை பாசனம் சம்பந்தமாக மத்திய, தமிழக மற்றும் கேரள அரசு தரப்பில் பிரதமர் தலைமையில் -நடத்தப்பட்டு,அறிவிக்கப்பட்டுள்ள "மற்றுமொரு -நிபுணர் குழு என்கிற அறிவிப்பு, தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பெ-ரியார் பாசன விவசாயிகளின் -நலனுக்கு மிகவும்எதிரானது.
மத்திய அரசின் கீழ் முழுமையான சட்ட-ரீதியான அங்கீகாரத்தை பெற்றுள்ள மத்திய -நதி நீர் -ஆணையம் தனது தொழில் நுட்ப அறிவோடும்,இதற்காகவே பணி அமர்த்தப்பட்டிருக்கும் பெ-ரிய -நிபுணர்களைக் கொண்டும் ஏற்கனவே ஆய்ந்து சமர்ப்பித்த அறிக்கை, அனைத்து உண்மையானதகவல்களையும், புள்ளி விவரங்களையும் -முறையாக தந்து, அணை தொழில்நுட்ப-ரீதியாக -முழுக்க தண்ணீரைக் கொண்டு இயங்க தயாராக இருக்கிறதுஎன்கிற அறிக் கையை ஏற்கனவே சமர்ப்பித்த பின்பு மீண்டும் மத்திய அரசின் -நிபுணர் குழு ஆய்வுக்கு வர வேண்டிய அவசியமில்லை.
தமிழக முதல்வரும், தமிழக அரசும் தமிழகத்தின் பாசன உ-ரிமைக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தேவையற்ற இந்த -நிபுணர் குழுவை ஏற்றுக் கொண்டதுமிகப் பெ-ரிய வரலாற்றுப் பிழை. மேலும், அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள -நிபுணர் குழுவின் விவரங்களோ, அந்த அறிக்கை அளிக்கப்படவேண்டிய கால வரம்போ, அந்த அறிக்கையின் -முடிவை அப்படியே கேரள அரசு ஏற்றுக் கொள்ளும் எனகிற எவ்விதமான உத்தரவாதம்தெ-ரிவிக்கப்படவில்லை.
இந்த சூழ்நலையில் இந்த அறிவிப்பு தமிழக மக்களை ஏமாற்ற மத்திய, மாநில அரசுகள் தங்களது சொந்த அரசியல் லாபத்திற்காக செய்யப்பட்ட மோசடிஒப்பந்தமாகவே கருத நியாயம் உள்ளது.
தமிழக மக்களின் பாசன உ-ரிமைகளுக்கு விரோதமாக எடுக்கப்பட்ட இந்த -முடிவு சம்பந்தமாக தமிழக விவசாயிகளின் உள்ளக் கு-முறலை, மத்தியமா-நில அரசுகளுக்கு உணர்த்தவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தீர்வின் மேல் பொதுமக்களின் கவனத்தைஈர்க்கவும், வரலாற்றுப் பிழையாக செய்யப்பட்ட இந்த அறிவிப்பை ரத்து செய்து, நிதி நீர் ஆணையம் ஏற்கனவே தந்துள்ள அறிக்கையின்படி 152 அடி நீர்தேக்குகின்ற உரிமையை மத்திய அரசு பெற்றுத் தர வலியுறுத்தியும் ஜூன் 2ம் தேதி தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம் -நடத்த முடிவெடுத்துள்ளோம் என்றுகூறியுள்ளனர்.