நிகழ் காலத்தில் நில்!
தென் இந்தியாவின் பெரிய மோட்டார் வாகனக் கண்காட்சி ஆட்டோ ஃபோகஸ் 2000", கோவையில் ஆகஸ்ட்மாதம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) தலைவர் அனில் குமார் கூறியதாவதுச
டெல்லியில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ போன்று கோவையில் நடைபெற உள்ள கண்காட்சி நடத்தப்படும்.சி.ஐ.ஐ.யின் தென் மண்டலம் சார்பில் இந்த கண்காட்சி நடைபெறும்.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து முக்கிய மோட்டார் வாகன டீலர்களும்,நுகர்வோர்களும் இக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு கோவையில் இக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இத்தகைய கண்காட்சி தென் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறை. உலகத் தரம் வாய்ந்த மோட்டார்வாகனங்களைப் பற்றிய தகவல்களை உள்ளூர் தயாரிப்பாளர்களும், நுகர்வோர்களும் தெரிந்து கொள்ளும்வகையில் இக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அனில் குமார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications