தமிழகத்தில் இன்று
துபாய்:
ஐக்கிய அரபு நாடுகளில் தங்கிப் பணிபுரிபவர்கள், முறையான குடியேற்ற அனுமதி (தீணிணூடுடிணஞ் ண்ணீணிணண்ணிணூண்டடிணீ ணிணூ ணூஞுண்டிஞீஞுணணாடிச்டூணீஞுணூட்டிணா) விசா இல்லாமல் தங்கியிருந்தால் அது சட்ட விரோதம் என்று துபாய் அரசுஅறிவித்துள்ளது.
90 நாள் விசா வைத்--தி-ருப்-பவர்-கள் குடியேற்ற அனுமதி இல்லாதவர்கள் ஐக்கிய அரபுஎமிரேட்டில் தங்கியிருப்பது சட்டவிரோதம். அவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
60 நாட்களுக்கான விசா முடிந்தவர்கள், மேலும் 30 நாட்களுக்கு விசாவைநீட்டிக்கலாம். ஆனால் 90 நாள் விசா முடிந்தவுடன் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்துவெளியேற வேண்டும். மீண்டும் வர விரும்பினால், ஐக்கிய அரபு எமிரேட் அல்லாதவேறு நாட்டிலிருந்து -மீண்-டும் புதிய விசாவுக்-கு விண்-ணப்-பிக்-க வேண்டும்.அப்போதுதான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் துபாய் கூறியுள்ளது.
இப்போது துபாயிலிருந்து, கத்தார், ஓமன் அல்லது ஈரானிலுள்ள கிஷ் ஆகியநாடுகளுக்குச் சென்று அங்கிருந்து கொண்-டே புதிய விசாவைப் பெற்று மீண்டும்ஐக்கிய அரபு எமிரேட்டிற்குள் புக முடியும்.
தற்போதைய சூழ்நிலையில், குடியேற்ற விசா இல்லாமல், ஒரு ஐக்கிய அரபு எமிரேட்நாட்டிற்கு விசா பெறுவது சாத்தியமில்லாத விஷயம். எனவே புதிய சட்டப்படி, புதுவிசா பெறுவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறப்படுகிறது.
தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு துபாய்க்கு மட்டுமே பொருந்தும். பிற ஐக்கியஅரபு எமிரேட் நாடுகளும் இதே போன்ற உத்தரவைப் பிறக்குமாஎன்பது குறித்துத்தெரியவில்லை. சுற்றுலா விசா வைத்திருப்போருக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
விசா இல்லாமல், மோசடியான வகையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலைபார்ப்பவர்களைத் தடுப்பதற்காகவே இந்த புதிய உத்தரவை துபாய் பிறப்பித்துள்ளது.
யு.என்.ஐ.