தமிழகத்தில் இன்று
இலங்கை பெண் அகதிகள்
ராமேஸ்வரம்:
இலங்கை ராணுவத்திடம் சிக்கினால் மானபங்கப்படுத்தி விடுவார்கள் என்பதால் அதற்குப் பயந்து தமிழகத்திற்குத் தப்பி வந்தோம் என்றுராமேஸ்வரத்திற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழ்ப் பெண்கள் கூறினார்கள்.
யாழ்ப்பாணத்தைப் பிடிக்க விடுதலைப் புலிகள் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக இலங்கை ராணுவமும் தீவிரமாகபோரிட்டுக் கொண்டுள்ளது. இந்த சண்டையினால் பாதிக்கப்பட்டுள்ளது அப்பாவிப் பொதுமக்கள்தான்.
சண்டை தீவிரமடைந்து கொண்டு வரும் நேரத்தில் யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் தப்பி வருகின்றனர்.
இப்படிப் படகு மூலம் தமிழகம் வந்த சகோதரிகளான சரஸ்வதி, மாரியம்மாள் ஆகியோர் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் கடும் சண்டை நடந்து வருகிறது.எங்களது பெற்றோர், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா தப்பி வந்து விட்டனர். இதனால் நாங்கள் அநாதைகளாக விடப்பட்டோம்.
விறகு வெட்டியும், கூலி வேலை செய்தும் பிழைத்து வந்தோம். சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்பட்டோம். எங்களைப் போன்ற இளம் பெண்களுக்குதற்போது யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பில்லை. இலங்கை ராணுவத்திடம் நாங்கள் சிக்கி விட்டால், நிச்சயம் மானபங்கப்படுத்தப்படுவோம். இதற்குப்பயந்தே நாங்கள் தமிழகத்திற்கு தப்பி வந்தோம் என்றனர் கண்களில் நீர் மல்க.
சாவகச்சேரியைச் சேர்ந்த சுதர்சன் என்ற அகதி கூறுகையில், விடுதலைப் புலிகள் இந்தப் போரில் வெற்றி பெற்றாலும் தமிழர்களுக்குப் பலன் இல்லை.யாழ்ப்பாணம் தவிர பிறபகுதிகளில் வாழும் தமிழர்களை இலங்கை ராணுவம் துன்புறுத்தும். அவர்களை ராணுவத்தினர் அடித்தே கொன்று விடுவார்கள்என்றார்.












Click it and Unblock the Notifications