தமிழகத்தில் இன்று
மே 24, 2000
நான்காம் நாள்
வான்காதல் காட்டி மயக்கிச் சதிசெய்த
பொய்மைக் குயிலினைப் போந்திடவே கூறியநான்
பொய்மை யறிவிழந்தேன். வீட்டிலே மாடமிசை
சித்தத் திகைப்புற்றோர் செய்கை யறியாமல், (5)
எத்துக் குயிலென்னை எய்துவித்த தாழ்ச்சியெலாம்
மீட்டும் நினைத்தங்கு வீற்றிருக்கும் போழ் தினிலே,
காட்டுத் திசையினிலென் கண்ணிரண்டும் நாடியவால்,
வானத்தே ஆங்கோர் கரும்பறவை வந்திடவும்
யானதனைக் கண்டே, இது நமது பொய்க்குயிலோ! (10)
என்று திகைத்தேன்; இருந்தொலைக்கே நின்றதனால்
நன்று வடிவம் துலங்கவில்லை நாடுமனம்
ஆங்கதனை விட்டுப் பிரிவதற்கு மாகவில்லை.
ஓங்குத் திகைப்பில் உயர்மாடம் விட்டுநான்
வீதியிலே வந்துநின்றேன்,மேற்றிசையில் அவ்வுருவம் (15)
சோதிக் கடலிலே தோன்றும்கரும் புள்ளியெனக்
காணுதலும், சற்றே கடுகி யருகே போய் ,
நாணமிலாப் பொய்க்குயிலோ என்பதனை நன்கறிவோம்
என்ற கருத்துடனே யான்விரைந்து சென்றிடுங்கால்,
நின்ற பறவையுந்தான் நேராகப் போயினதால் (20)
யான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும்
மேனிநன்கு தோன்ற அருகினிலே மேவாது
வானி லதுதான் வழிகாட்டிச் சென்றிடவும்
யான்நிலத்தே சென்றேன் இறுதியில் முன்புநாம்
கூறியுள்ள மாஞ்சோலை தன்னைக் குறுகியந்த (25)
ஊறிலாப் புள்ளுமத னுள்ளே மறைந்ததுவால்,
மாஞ்சோலைக் குள்ளே மதியிலிநான் சென்றாங்கே
ஆஞ்சோதி வெள்ளம் அலையுமொரு கொம்பரின்மேல்
சின்னக் கருங்குயிலி செவ்வனே வீற்றிருந்து
பொன்னங்குழலின் புதிய ஒலிதனிலே (30)