தமிழகத்தில் இன்று
ந-டி-கை ரம்பாவின் நாயை விஷம் வைத்-து கொன்-ற வாட்ச்-மேன் கை-து
சென்னை:
நடிகை ரம்பா ஆசையாக வளர்த்த ரஷ்ய நாய்க் குட்டியை விஷம் வைத்துக் கொன்ற அவரது வீட்டு வாட்ச்மேன் கைது செய்யப்பட்டார்.
தமிழ் சினிமாவில் கவர்ச்சிப் புயலாக கலக்கிக் கொண்டிருப்பவர் ரம்பா. அவரே கலங்கிப் போன சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது.
நடிகை ரம்பாவிற்கு -நாய்க்குட்டிகள் என்றால் கொள்ளை பி-ரியம். 10 வகையான -நாய்க் குட்டிகளை அவர் செல்லமாக வீட்டில் வளர்த்து வருகிறார்.இவரது வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. இந்த பத்து வகையான -நாய்க் குட்டிகளும் வெளிநிாட்டு இறக்குமதிகள்.
இந்த பத்தில் ரம்பாவுக்கு மிகவும் பி-ரியமான -நாய்க்குட்டி ரஷ்யாவை சேர்ந்தது.
கிட்டத்தட்ட கன்றுக்குட்டி சைசுக்கு இருக்கும் அந்த நாயை தான் மடியில் கிடத்தி கொஞ்சுவாராம் ரம்பா. தன் மீது பிரியத்தை கொட்டும் ரம்பாவைவிட்டு பி-ரியவே பி-ரியாதாம் அந்த -நாய்க் குட்டி.
அதே -நரத்தில் காவலுக்கும் அது கெட்டிக்காரனாம். ரம்பா அறைக்கு யாராவது உள்ளே நுழைந்து விட்டால் ஓடோடி வருமாம் கடிப்பதற்கு.
கடந்த வாரத்தில் ரம்பா வீட்டு வாட்ச்மேன் வெள்ளைச்சாமி என்பவர், ரம்பாவை தேடி வந்தவர்கள் பற்றி தகவல் சொல்வதற்காக வீட்டிற்குள்நுழைந்துள்ளார். ரம்பா அறைக் கதவை தட்டியதும் இந்த நாய்க் குட்டி சீறிக் கொண்டே வந்து வாட்ச்மேன் மீது பாய்ந்தது. இதனால் ஆத்திரமடைந்தஅந்த வாட்ச்மேன், அந்த நாய்க்குட்டியை ஓங்கி மிதித்தார்.
இதை ரம்பா பார்த்து விட்டார். செம டென்ஷன் ஆன ரம்பா, வாட்ச்மேன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். "இனிமே என் செல்லங்களை அடிச்சே...தொலைச்சுப்புடுவேன்... என்று மிரட்டி அனுப்பி வைத்தார்.
அன்று முதல் அந்த -நாய்க் குட்டி மீது வாட்ச்மேனுக்கு விரோதம் வளர்ந்தது. இந்த சம்பவம் -நடந்த மறு-நாள் ரம்பா படப்பிடிப்புக்காக ஐதராபாத்சென்று விட்டார். அந்த -நரத்தில் -நாயை பழி தீர்க்க வாட்ச்மேன் திட்டம் தீட்டினார்.
வழக்கமாக நாய்க் குட்டி வைக்கும் உணவில் விஷத்தை கலந்தார். உண்ட சிறிது நிேரத்தில் நாய்க்குட்டி இறந்தது. இந்த தகவல் தெ-ரிந்ததும்ஐதராபாத்தில் இருந்து சோகத்துடன் திரும்பினார் ரம்பா.
-நாய்க் குட்டி எப்படி இறந்தது என்பது பற்றி விசா-ரித்த போது உண்மை தெ-ரிந்ததும் ரம்பா அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தனது தம்பி வாசு -மூலம்விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசா-ரித்தபோது வாட்ச்மேன் உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், பிரியமான நாய்க் குட்டி இறந்த சோகத்தின் இரண்டு -நாட்களாக சாப்பிடாமல் இருக்கிறாராம் ரம்பா.