தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம் அருகே தீவில் சிக்கியுள்-ள 20 அகதிகள்
ராமேஸ்வரம்:
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தப்பி வந்து தீவு ஒன்றில் சிக்கிக் கொண்டுள்ள 20அகதிகளை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தொடர்ந்து அகதிகள் வந்த வண்ணம்இருக்கின்றனர். திங்கள்கிழமை 9 அகதிகள் வந்தனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்திய கடற்படை ஹெலிகாப்டர் ரோந்துப் பணியில்ஈடுபட்டிருந்தது.அப்போது, ராமேஸ்வரம் அருகேயுள்ள 5-வது தீடை என்ற தீவில் சிலஇலங்கை அகதிகள் தத்தளிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அகதிகள் ஹெலிகாப்டரைப் பார்த்து கூச்சல் போட்டு உதவி கோரினர். இதையடுத்துஅவர்களை மீட்க ராமேஸ்வரம் தாசில்தார் காசிநாதன் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கைஎடுத்து வருகிறார்கள். இவர்கள் புதன்கிழமை மீட்கப்படுவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications